search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வாலிபர்கள் தற்கொலை"

    வேதாரண்யம் அருகே 2 வாலிபர்கள் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    வேதாரண்யம்:

    வேதாரண்யத்தை அடுத்த வாய்மேடு காவல் சரகத்திற்குட்பட்ட தகத்தூர் பகுதியை சேர்ந்தவர் சோமசுந்தரம். இவருடைய மகன் செந்தில் (வயது 28). இவர் டிராக்டர் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். செந்தில் மது பழக்கத்திற்கு அடிமையானவர் என்று கூறப்படுகிறது.

    இந்த நிலையில் சம்பவத்தன்று பூச்சிமருந்தை குடித்து மயங்கி விழுந்தார். உடனே அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு திருத்துறைப்பூண்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சையில் இருந்த செந்தில் நேற்று சிகிச்சை பலனின்றி இறந்தார்.

    இது குறித்து வாய்மேடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராதாபாய் மற்றும் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இறந்த செந்திலுக்கு சூர்யா என்ற மனைவியும், ஒரு பெண் குழந்தையும் உள்ளனர்.

    வாய்மேடு காவல் சரகத்திற்குட்பட்ட தாணிகோட்டம் சின்னதேவன் தெரு பகுதியை சேர்ந்தவர் கல்யாணசுந்தரம் (வயது 34). விவசாய கூலித்தொழிலாளி. இவரது மனைவி மகாலெட்சுமி. இந்த நிலையில் குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்படுவதாக கூறப்படுகிறது.

    இதனால் மன வேதனையில் இருந்து கல்யாணசுந்தரம் சம்பவத்தன்று வி‌ஷம் குடித்து மயங்கி விழுந்தார். உடனே அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு திருத்துறைப் பூண்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்து வாய்மேடு போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நெல்லை மாவட்டத்தில் பல்வேறு சம்பவங்கள் தொடர்பாக வாலிபர்கள் உள்பட 3 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
    நெல்லை:

    சங்கரன்கோவில் அருகே உள்ள பெருமாள்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் மாரியப்பன். இவரது மகன் சமுத்திரம் (வயது18). இவர் சமீபத்தில் பிளஸ்-2 தேர்வு எழுதினார். அதில் பெயிலாகி விட்டதால், சங்கரன் கோவிலில் உள்ள டுட்டோரியலில் படித்து வந்தார். இந்த நிலையில் சமுத்திரத்திற்கு சரியாக படிக்க முடியாததால் மனஉளைச்சல் அடைந்தார். நேற்று வீட்டில் தனியாக இருந்த சமுத்திரம் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து சின்னக்கோவிலான்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பணகுடி அருகே உள்ள பழவூரை அடுத்த கண்ணன்குளம் கிராமத்தை சேர்ந்தவர் தவசிமுத்து. இவரது மகன் ஹரிகரன் (25). இவர் கடந்த 18-ந்தேதி விஷம் குடித்த நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்தார். அவரை மீட்டு நாகர்கோவில் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலன் இல்லாமல் நேற்று பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து பழவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

    பாளை அருகே உள்ள திருவண்ணநாதபுரம் பொட்டல் பகுதியை சேர்ந்தவர் பிச்சமுத்து. இவரது மனைவி அழகம்மாள் (75). இவருக்கு பல்வேறு நோய்கள் இருந்ததால் அதற்காக மாத்திரை சாப்பிட்டு வந்தார். ஆனாலும் நோய் குணமாக வில்லை என்று கூறப்படுகிறது. இதில் மனமுடைந்த அழகம்மாள் அளவுக்கு அதிகமாக அனைத்து மாத்திரை களையும் மொத்தமாக தின்று விட்டார். இதனால் உயிருக்கு ஆபத்தான நிலையில் அவரை பாளை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலன் இல்லாமல் நேற்றிரவு அவர் பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து பாளை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    ×